மேலும்

சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சி – பிரெஞ்சு போர்க்கப்பலின் தளபதி தெரிவிப்பு

Captain Stanislas de Chargerèsசிறிலங்கா கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளை ஒழுங்கு செய்யவுள்ளதாக பிரெஞ்சுக் கடற்படையின் மிஸ்ரால் கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் ஸ்ரனிஸ்லஸ் டி சார்கெரஸ் தெரிவித்துள்ளார்.

பிரெஞ்சுக் கடற்படையின் உலங்குவானூர்தி தாங்கி கப்பலான மிஸ்ராலில், செய்தியாளர்களைச் சந்தித்த போது, அதன் கட்டளை அதிகாரியான கப்டன் ஸ்ரனிஸ்லஸ் டி சார்கெரஸ்,

இந்தக் கூட்டுப் பயிற்சிகளின் போது கடற்கொள்ளை எதிர்ப்பு, போதைப் பொருள் கடத்தல் தடுப்பு, என்பவற்றில்கூடுதல் கவனம் செலுத்தப்படும். பிரெஞ்சுக் கடற்படையின் சிறப்புப் படைகளும் இதில் ஈடுபடுத்தப்படும்.” என்று கூறினார்.

Captain Stanislas de Chargerès

பிரெஞ்சுக் கடற்படையின் உலங்குவானூர்தி தாங்கி கப்பல் ஒன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *