மேலும்

புதிய அமைச்சர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை – சுயவிபரக் கோவைகளை அனுப்ப முதல்வர் கோரிக்கை

cm-npcவடக்கு மாகாணசபையில் வெற்றிடம் ஏற்பட்டுள்ள இரண்டு அமைச்சர் பதவிகளுக்கு நியமனங்களை செய்வதற்காக, அனைத்து மாகாணசபை உறுப்பினர்களிடம் இருந்தும் விண்ணப்பங்களைக் கோரியிருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணசபையின் இன்றைய அமர்வில் உரையாற்றிய போதே முதலமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

விசாரணைக் குழுவினால் குற்றம் சுமத்தப்பட்டதையடுத்து, முதலமைச்சர் கேட்டுக் கொண்டதற்கு அமைய, விவசாய அமைச்சர் ஐங்கரநேசனும், கல்வி அமைச்சர் குருகுலராசாவும் தமது அமைச்சுப் பதவிகளை விட்டு விலகினர்.

இதையடுத்து, இந்த இரண்டு அமைச்சுப் பொறுப்புகளையும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேற்று பொறுப்பேற்றிருந்தார்.

அதேவேளை, புதிய கல்வி மற்றும் விவசாய அமைச்சர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளையும் முதலமைச்சர் நேற்று ஆரம்பித்துள்ளார்.

இதற்கமைய, ஆளும்கட்சியின் மாகாணசபை உறுப்பினர்களை, தமது சுயவிபரக் கோவையை சமர்ப்பிக்குமாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதேவேளை, புதிய அமைச்சர்கள் நியமனம் தொடர்பாக அனைத்து தரப்புகளுடனும் கலந்துரையாடி, தீர்மானம் எடுக்கும்படி, வடமாகாண முதலமைச்சரிடம் சில மாகாணசபை உறுப்பினர்கள் கோரியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *