மேலும்

சிறிலங்கா அரச, பாதுகாப்பு உயர்மட்டங்களுடன் பாகிஸ்தான் கடற்படைத் தளபதி பேச்சு

pak-naval chief-colombo (1)சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் சகாவுல்லா, சிறிலங்கா அதிபர் , பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்  மற்றும் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ஐந்து நாட்கள் பயணமாக பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் சகாவுல்லா கடந்த 110ஆம் நாள் சிறிலங்கா வந்துள்ளார்.

இவர் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, மற்றும் முப்படைகளின் தளபதிகள், கூட்டுப்படைகளின் தளபதி ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

pak-naval chief-colombo (1)pak-naval chief-colombo (2)

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக இந்தச் சந்திப்புகளின் போது பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் கடற்படைத் தளபதி திருகோணமலை மற்றும் கண்டிக்கும் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *