மேலும்

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது வடக்கு மாகாணசபை

npcபரபரப்பான சூழலில் வடக்கு மாகாணசபையின் அமர்வு இன்று காலை இடம்பெறவுள்ளது. அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்த விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை மற்றும் அதன் பரிந்துரைகள் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

கடந்த 7ஆம் நாள் நடந்த சிறப்பு அமர்வில், மாகாணசபை உறுப்பினர்களுக்கு விசாரணைக் குழுவின் அறிக்கையின் பிரதிகள் வழங்கப்பட்டன.

இதன் அடிப்படையில் மாகாணசபை உறுப்பினர்கள் இன்றைய கூட்டத்தில், தமது கருத்துக்களை வெளியிடுவர். இதன் அடிப்படையில் தாம் முடிவை எடுக்கவுள்ளதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.

இன்றைய கூட்டத்தொடரில், முதலமைச்சர், அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பான முடிவை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *