இந்தியப் பிரதமரைச் சந்திக்க புதுடெல்லி விரைந்தார் சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சர்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்துவதற்காக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, இன்று புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சராக அண்மையில் பதவியேற்றுக் கொண்ட ரவி கருணாநாயக்க, தமது முதல் வெளிநாட்டுப் பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொண்டுள்ளார்.
அவர் இன்றிரவு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பார் என்றும், நாளை ஏனைய இந்திய அதிகாரிகளுடன் பேச்சு நடத்திய பின் நாடு திரும்புவார் என்றும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நேற்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரை சீனத் தூதுவர் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.