அமெரிக்கா 15 மில்லியன் ரூபா உதவி
சிறிலங்காவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரண உதவியாக 15 மில்லியன் ரூபாவை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர மீட்பு, உதவிகளை வழங்குமாறு சிறிலங்கா அரசாங்கம் உலக நாடுகளிடம் கோரியிருந்தது.
இதற்கமைய இந்தியா மூன்று கப்பல்களில் மீட்புக் குழுக்களையும், உதவிப் பொருட்களையும் அனுப்பிவைத்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்கா 15 மில்லியன் ரூபா பெறுமதியான உடனடி உதவியை வழங்கும் என்று அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் அறிவித்துள்ளார்.
யுஎஸ் எய்ட் மற்றும் அமெரிக்காவின் வெளிவிவகார அனர்த்த உதவி மையம் ஆகியவற்றின் மூலம் இந்த உதவி வழங்கப்படவுள்ளது என்றும் அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சிறிலங்காவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகிஸ்தானும் அவசர உதவியை அனுப்பிவைக்கும் என்று பாகிஸ்தான் தூதுவர் அறிவித்துள்ளார்.