மேலும்

எட்கா குறித்து முடிவெடுக்க இந்தியா செல்கிறார் ரணில்

ranil-japanசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எட்கா எனப்படும் பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு தொடர்பான  இறுதி முடிவுகளை எடுப்பதற்காகவே சிறிலங்கா பிரதமர் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ஜப்பானுக்கு மேற்கொள்ளவிருக்கும் பயணத்தை அடுத்து, இந்தியாவுக்கான பயணத்தை ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பயணத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தியாவின் உயர்மட்ட அரசியல் தலைவர்களை அவர் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *