மேலும்

சீனக்குடா எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு வழங்க சிறிலங்கா முடிவு

trincomalee oil farmதிருகோணமலை- சீனக்குடாவில் உள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கி, கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சீனக்குடா எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தன.

இந்த நிலையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவுக்கும் இடையில் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்தே, இந்த எண்ணெய்க் குதங்களை இநதியாவுக்கு வழங்கி கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும், 10 எண்ணெய்க் குதங்கள் சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வசம் வைத்திருப்பதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *