அமைதியைக் கட்டியெழுப்புதல் குறித்த சிறிலங்கா- ஐ.நா இடையிலான ஐந்தாவது பேச்சு நிறைவு
அமைதியைக் கட்டியெழுப்புதல் தொடர்பாக ஐ.நாவுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையிலான ஐந்தாவது கூட்டம் நேற்று முடிவுக்கு வந்தது.
சிறிலங்கா தரப்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும், ஐ.நா தரப்பில் சிறிலங்காவுக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலியும் இந்தக் கூட்டத்துக்கு தலைமை தாங்கியிருந்தனர்.
சிறிலங்காவில் அமைதியைக் கட்டியெழுப்பும் நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து ஐ.நா நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த அமைதியைக் கட்டியெழுப்பும் திட்டம் தொடர்பான மீளாய்வுகளை மேற்கொள்ளும் வகையிலேயே இந்தக் கூட்டம் இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திட்ட ஆவணங்கள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்டதாக, சிறிலங்காவுக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலி தெரிவித்துள்ளார்.