சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நியமனம்
சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக, யாழ்.படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தின் இரண்டாவது நிலைப் பதவியான இராணுவத் தலைமை அதிகாரி பதவிக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இராணுவத் தலைமை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா ஓய்வுபெற்றதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்கு ஆறு மேஜர் ஜெனரல்களின் பெயர்கள் சிறிலங்கா இராணுவத் தளபதியால், சிறிலங்கா அதிபருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
இதையடுத்தே, மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவை இராணுவத் தலைமை அதிகாரியாக சிறிலங்கா அதிபர் நியமித்துள்ளார்.