சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் சீன பாதுகாப்பு அமைச்சர்
மூன்று நாட்கள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சாங் வான்குவான் இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சாங் வான்குவான் நேற்றிரவு 10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இன்று காலை அவர், சிறிலங்கா அதிபரின் அதிகாரபூர்வ வதிவிடத்தில், அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
எனினும் இந்தப் பேச்சுக்களின் விபரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை.
சிறிலங்கா பிரதமர் மற்றும் உயர்மட்ட தலைவர்களையும், சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளையும் சீன பாதுகாப்பு அமைச்சர் சந்திக்கவுள்ளார்.
நாளை ஜெனரல் சாங் வான்குவான் சிறிலங்கா பயணத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டுச் செல்லவுள்ளார்.