மேலும்

சிறிலங்கா கடலோரக் காவல்படைக்கு மூன்று ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள்

opv-launching-2சிறிலங்கா கடலோரக் காவல்படையைப் பலப்படுத்துவதற்கு மூன்று ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தில் கட்டப்படவுள்ளன.

இதற்கான அமைச்சரவைப் பத்திரம், பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் சிறிலங்கா அதிபரால் அண்மையில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இந்த மூன்று ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களினதும் மொத்த பெறுமதி 180 மில்லியன் ரூபாவாகும்.

இந்தக் கப்பல்களைக் கட்டுவதற்கான செலவை ஜப்பான் வழங்கவுள்ளது.

சிறிலங்காவைச் சுற்றியுள்ள 517,000 சதுர கி.மீ  கடற்பகுதியை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலேயே கடலோரக் காவல்படைக்கு  இந்தக் கப்பல்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

கரையோரப் பகுதி, சிறிலங்கா கடல்எல்லைக்குட்பட்ட பகுதி, மற்றும் சிறிலங்காவில் பொருளாதார வலயத்துக்குட்பட்ட ஆழ்கடல் பகுதியில் தேடுதல், மீட்பு, சட்டத்தை நடைமுறைப்படுத்தல், ஆகியவற்றில் சிறிலங்கா கடரோரக் காவல்படை ஈடுபடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *