மேலும்

கப்பலில் சிக்கியிருந்த மூன்று இலங்கையர்கள் ஓமான் விமானப்படையால் மீட்பு

Omani Air Forceகஷாப் துறைமுகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்றில் சிக்கியிருந்த மூன்று இலங்கை மாலுமிகளை ஓமான் விமானப்படையினர் உலங்கு வானூர்தி மூலம் மீட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மோசமான காலநிலையால், கப்பலில் இருந்த மாலுமிகள் உதவிக் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து றோயல் ஓமான் விமானப்படை உலங்கு வானூர்தி விரைந்து சென்று மூன்று இலங்கையர்களை மீட்டுச் சென்றதாக ரைம்ஸ் ஒவ் ஓமான் செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று முன்தினம் இவர்கள் மீட்கப்பட்டு கஷாப் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *