மேலும்

வெளிநாட்டு நீதிபதிகள் குறித்து முடிவெடுக்கும் உரிமை சிறிலங்காவுக்கே உள்ளதாம்

rajitha senaratneபோர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதா இல்லையா என்பது பற்றி சிறிலங்கா அரசாங்கமே முடிவு செய்யும், அது சிறிலங்கா அரசாங்கத்தின் இறையாண்மை உரிமை என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

”போர்க்குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அண்மையில் சிறிலங்காவுக்கு வந்திருந்த போது, போர்க்குற்ற விசாரணைக்கான நீதிச் செயல்முறையில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு பெறப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.

அவர் அதனை பரிந்துரை செய்திருந்தாலும், அதுபற்றி முடிவு செய்வது சிறிலங்காவின் இறையாண்மை உரிமையாகும்.

வெளிநாட்டு நீதிபதிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை சிறிலங்கா அரசாங்கமே கொண்டிருக்கிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *