இராணுவத்தைப் பலவீனப்படுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் – சிறிலங்கா அதிபர்
சிறிலங்கா இராணுவத்தைப் பலவீனப்படுத்துவதற்குத் தாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று சூளுரைத்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு விடயத்தில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமிருக்காது. தேசிய பாதுகாப்பைக் கையாளும் போது, நல்ல அனைத்துலக உறவுகள் முக்கியமானது.
சைபர் அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட எத்தகைய அனைத்துலக அச்சுறுத்தலையும் எதிர்கொள்வதற்கு ஏற்ற வகையில், சிறிலங்கா தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.