மலேசியா செல்கிறார் சிறிலங்கா அதிபர்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இரண்டு நாட்கள் பயணமாக மலேசியாவுக்குச் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த மாதம் 14ஆம் நாள், சிறிலங்கா அதிபரின் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.
மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா அதிபராகப் பதவியேற்ற பின்னர் மலேசியாவுக்கு மேற்கொள்ளவிருக்கும் முதலாவது பயணம் இதுவாகும்.
இந்தப் பயணத்தின் போது, மலேசியத் தலைவர்களுடனான சந்திப்பில், இருதரப்பு வர்த்தகத்தை மேலும் அதிகரிப்பது குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.