வரவுசெலவுத் திட்டம் 107 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது – கூட்டமைப்பும் ஆதரவு
சிறிலங்கா அரசாங்கத்தின், 2007ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம், 107 மேலதிக வாக்குகளினால் இன்று மாலை நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீது இன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது, ஆதரவாக 162 வாக்குகள் அளிக்கப்பட்டன. 55 வாக்குகள் எதிராக அளிக்கப்பட்டன.
மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட 7 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதன் மூலம், 107 மேலதிக வாக்குகளினால் வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டு எதிரணி மற்றும் ஜேவிபி உறுப்பினர்கள் வரவுசெலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களித்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈபிடிபி, இதொகா உறுப்பினர்கள், வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.