மேலும்

ஊடகங்கள் மூலம் பேசக் கூடாது – சீனத் தூதுவருக்கு சிறிலங்கா ‘குட்டு’

yi-xiangliangசிறிலங்கா அரசாங்கம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட சீனத் தூதுவருடன், சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் எசல வீரக்கோன், தொலைபேசி மூலம் உரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க வெளியிட்ட கருத்துக்களை ஊடகவியலாளர்கள் முன்பாக விமர்சித்து சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.

இதுகுறித்து, சீனத் தூதுவரை வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்து அதிருப்தியை வெளியிட சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் எசல வீரக்கோன், நேற்று சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங்குடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார்.

இதன் போது, இதுபோன்ற கருத்துக்களை ஊடகங்கள் மூலம் கலந்துரையாடக் கூடாது என்று சீனத் தூதுவருக்கு சிறிலங்கா  வெளிவிவகாரச் செயலர், எடுத்துக் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், எந்த விவகாரம் தொடர்பாகவும், திறந்த கலந்துரையாடல் நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் எப்போதும் தயாராகவே இருப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *