மேலும்

சிறிலங்கா அமைச்சர்கள் மட்டக்குழுவில் சுமந்திரன் – அரச குழுவுடன் இந்தியா செல்கிறார்

sumanthiranஇந்தியா செல்லும் சிறிலங்காவின் அமைச்சர்கள் மட்டக்குழுவில் முதல் முறையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இடம்பெறவுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மீனவர் பிரச்சினை குறித்துப் பேச்சு நடத்த இன்று புதுடெல்லி செல்லும் சிறிலங்கா அமைச்சர்கள் மட்டக் குழுவில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா தரப்புக் குழுவின் ஒரு உறுப்பினராக இவர், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுடனான பேச்சுக்களில் பங்கேற்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

இழுவைப்படகு மீன்பிடி முறையைத் தடை செய்யும் தனிநபர் பிரேரணை ஒன்றை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *