மேலும்

‘காலைக்கதிர்’ : யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவருகிறது புதிய நாளிதழ்

kalaikkathir-publishing-1யாழ்ப்பாணத்தில் இருந்து காலைக்கதிர் என்ற புதிய நாளிதழ் இன்று முதல் வெளிவர ஆரம்பித்துள்ளது. மூத்த ஊடகவியலாளர் கானமயில்நாதனை பிரதம ஆசிரியராகக் கொண்டு, மற்றொரு மூத்த ஊடகவியலாளர் வித்தியாதரன் இந்த நாளிதழை வெளியிடுகிறார்.

இந்த நாளிதழ் வெளியீட்டு விழா நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள், மற்றும் பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் காலைக்கதிர் நாளிதழின் விடியல் வீச்சு சிறப்பிதழை, இரா.சம்பந்தனும், சி.வி.விக்னேஸ்வரனும் இணைந்து வெளியிட்டனர்.

kalaikkathir-publishing-2kalaikkathir-publishing-3kalaikkathir-publishing-4kalaikkathir-publishing-5kalaikkathir-publishing-6kalaikkathir-publishing-7kalaikkathir-publishing-8

யாழ்ப்பாணத்தில் இருந்து உதயன், தினக்குரல், வலம்புரி ஆகிய மூன்று நாளிதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், காலைக்கதிர் நாளிதழ் இன்று முதல் வெளிவரத் தொடங்கியுள்ளது.

ஊடகத்துறையின் புதுவரவான காலைக்கதிர் நாளிதழ் சிறப்புடன் வளர புதினப்பலகை குழுமமும் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *