மேலும்

Tag Archives: சுமந்திரன்

கலப்பு விசாரணையை மறுத்தால் அனைத்துலக விசாரணை – சுமந்திரன் எச்சரிக்கை

வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட விசாரணைப் பொறிமுறையை அமைக்கத் தவறினால், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எச்சரித்துள்ளார்.

கூட்டமைப்புத் தலைமையை மாற்றும் திட்டம் – மாவை, சுமந்திரன் மறுப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வது குறித்து கட்சியின் அடுத்த உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக, வெளியாகிய செய்திகளை, தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் நிராகரித்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக சுமந்திரன் – சம்பந்தனுக்கு ஓய்வு கொடுக்க திட்டம்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக சுமந்திரனை தெரிவு செய்வது தொடர்பாக கூட்டமைப்பின் அடுத்த உயர்மட்டக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒற்றையாட்சியை ஏற்கவில்லை கூட்டமைப்பு – உதய கம்மன்பில

ஒற்றையாட்சி அரசு கொள்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள் விடுதலை குறித்து புதனன்று முடிவு – சம்பந்தனுக்கு மைத்திரி உறுதி

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, எதிர்வரும் 17ஆம் திகதி தீர்க்கமான முடிவு ஒன்றை தெரிவிப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நேற்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் உறுதியளித்துள்ளார்.

புலிகளின் கை ஓங்க வேண்டும் – சிறிலங்கா அமைச்சர்கள் முன் விஜயகலா உரை

வடக்கு, கிழக்கில் விடுதலைப் புலிகளை உருவாக்க வேண்டும் என்று, தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்.

வட மாகாணசபை தேர்தலில் புதிய கூட்டணியில் களமிறங்குவேன் – விக்னேஸ்வரன் அதிரடி

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட வாய்ப்பில்லை என்றும், புதிய கூட்டணி ஒன்றை அமைத்துப் போட்டியிடும் வாய்ப்பு இருப்பதாகவும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ரணிலுடன் உடன்பாடு கையெழுத்திடவில்லை – உறுதிப்படுத்தினார் சுமந்திரன்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த உடன்பாட்டிலும் கையெழுத்திடவில்லை என்று கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஒற்றையாட்சிக்கு இணங்கிவிட்டதாக கூறப்படுவது பொய் – சுமந்திரன்

ஏக்கிய இராச்சிய என்பது ஒற்றையாட்சி அல்ல, நாங்கள் ஒற்றையாட்சிக்கு இணங்கி விட்டதாக கூறப்படுவது பொய் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ரிரிவி தினகரன் – சுமந்திரன் சந்திப்பு

தமிழ்நாட்டில், சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு, பெருவெற்றியைப் பெற்றுள்ள ரிரிவி தினகரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம், இலங்கைத் தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்துள்ளார்.