மேலும்

இந்திய- சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் – இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து மீளாய்வு

4th_indo_sri_lanka_defence_dialogue-2நான்காவது இந்திய- சிறிலங்கா பாதுகாப்பு கலந்துரையாடல் நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புகள் தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டது.

இந்திய பாதுகாப்புச் செயலாளர் மோகன் குமார் தலைமையிலான குழுவினரும், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தலைமையிலான குழுவினரும், இந்தக் கலந்துரையாடலில் பங்கு பற்றினர்.

இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா, சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதி மற்றும் முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்பு உயர் அதிகாரிகளும், இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.

4th_indo_sri_lanka_defence_dialogue-24th_indo_sri_lanka_defence_dialogue-1

இந்தக் கலந்துரையாடலின் போது, இருதரப்பு மற்றும் பரஸ்பர ஈடுபாடுள்ள பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக நீண்ட நேரம் ஆராயப்பட்டது.

2012ஆம் ஆண்டு தொடக்கம் இந்திய- சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *