மேலும்

மாதம்: September 2016

மோதலுக்கான காரணிகளுக்குத் தீர்வு காணத் தவறியுள்ளது சிறிலங்கா- மங்கள சமரவீர

மோதல்களுக்கான காரணிகளுக்கு தீர்வு காண சிறிலங்கா தவறியுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணைக்கான நீதிச்சபையை ஐ.நா பொதுச்செயலர் உருவாக்கவுள்ளாராம்

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்களை விசாரிக்க, போர்க்குற்ற விசாரணைக்கான நீதிச்சபையை உருவாக்குவது தொடர்பான ஆவணங்கள் ஐ.நாவினால் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெல.

ஐ.நா செயலணியுடன் இணைந்து செயற்படுவது குறித்து சிறிலங்கா ஆலோசனை

காணாமற்போனோர் தொடர்பான ஐ.நா செயலணியுடன் இணைந்து செயற்படுவது குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு, சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

புனேயில் கைதான யாழ். இளைஞர் கொழும்புக்கு நாடு கடத்தப்பட்டார்

போலி இந்தியக் கடவுச்சீட்டு மூலம் ஜேர்மனிக்குச் செல்ல முயன்ற போது, புனே, லொஹேகான் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சுதன் சுப்பையா என்ற தமிழர், கொழும்புக்கு நாடுகடத்தப்பட்டார்.

உள்ளூராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி – உறுதிப்படுத்தினார் மகிந்த

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டு எதிரணி தனித்துப் போட்டியிடும் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச உறுதிப்படுத்தியுள்ளார்.

அடுத்தவாரம் தொடங்குகிறது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 33 ஆவது கூட்டத்தொடர்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 33 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 13ஆம் நாள், தொடங்கி 30 ஆம் நாள் வரை ஜெனிவாவில் இடம்பெறவுள்ளது.

“பிரபாகரனின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது” – மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன

புதிய தலைமைத்துவம் ஒன்று புலிகளின் தலைவர் பிரபாகரனின் தலைமைத்துவத்துக்கு ஈடான காத்திரமான இடத்தைப் பிடிக்க முடியாது என்று மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன  தெரிவித்துள்ளார்.

26 முன்னாள் போராளிகளுக்கு முதற்கட்டமாக விச ஊசி மருத்துவ பரிசோதனை

முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வின் போது, விசஊசி ஏற்றப்பட்டதா என்பதை ஆய்வு செய்வதற்காக, நடத்தப்பட்ட முதற்கட்ட பரிசோதனைகளில், 26 முன்னாள் போராளிகள் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்கா தூதுவரைத் தாக்கிய மேலும் நான்கு பேரைத் தேடுகிறது மலேசிய காவல்துறை

மலேசியாவுக்கான சிறிலங்கா தூதுவர் இப்ராகிம் அன்சார் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மேலும் நான்கு பேரைத் தேடி வருவதாக மலேசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவருக்கு மரணதண்டனை – பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் தீர்ப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட ஐந்து பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.