மேலும்

நாள்: 18th September 2016

மன்னாரில் 1400 ஆண்டுகளுக்கு முந்திய குடியிருப்புத் தொகுதி – தொல்பொருள் ஆய்வில் கண்டுபிடிப்பு

மன்னார் – கட்டுக்கரைக்குளம், குருவில் பகுதியில் நடத்தப்படும், அகழ்வாராய்ச்சியில், 1400 ஆண்டுகளுக்கு முன்னர், மக்கள் வசித்ததை உறுதிப்படுத்தும் தொல்பொருள் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.

13ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படையிலேயே இனப்பிரச்சினைக்குத் தீர்வு- யாழ்ப்பாணத்தில் ரணில்

13 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற இராணுவத் தளபதிகளை குறிவைக்கிறது கூட்டு எதிரணி

சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற உயர்மட்டத் தளபதிகளை தமது அரசியல் நடவடிக்கைகளில் இணைத்துக் கொள்வதற்கு, மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணி முடிவு செய்துள்ளது.

பிரபாகரனின் அடையாள அட்டையை நினைவுப்பொருளாக வைத்திருக்கும் கமால் குணரத்ன

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அடையாள அட்டையைத் தாமே நினைவுப் பொருளாக எடுத்து வைத்திருப்பதாக, மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

அணிசேரா மாநாட்டைப் புறக்கணித்த மைத்திரி இன்று நியூயோர்க் பயணமாகிறார்

ஐ.நா பொதுச்சபையின் 71 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்கதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று நியூயோர்க் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.