போர்க்குற்றங்கள் தொடர்பான கேள்விகளில் இருந்து நழுவினார் பான் கீ மூன்
சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நழுவினார்.
சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நழுவினார்.
பாதிக்கப்பட்ட மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய விசாரணைப் பொறிமுறைக்கே ஐ.நா உதவிகளை வழங்கும் என்று, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தம்மிடம் உறுதியளித்தார் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், வலி.வடக்கில் அண்மையில் மீளக் குடியேற்றப்பட்ட மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.