வலி.வடக்கில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார் அமெரிக்க தூதுவர்
யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், வலி.வடக்கில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருடன், வலி.வடக்கில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார்.
அத்துடன் கீரிமலைப் பகுதியில் மீள்குடியமர்வுக்காக கட்டப்பட்டு வரும் வீடுகளையும் அவர் பார்வையிட்டார். அத்துடன் விடுவிக்கப்படாத பிரதேசங்கள் தொடர்பான விபரங்களையும் அவர் கேட்டறிந்தார்.
வடக்கு மாகாண அமைச்சர்கள், மற்றும் மாகாணசபை உறுப்பினர்களும் இதன்போது உடனிருந்தனர்.