மேலும்

இந்த ஆண்டில் இந்தியாவுடன் எட்கா உடன்பாடு – சிறிலங்கா பிரதமர்

India-srilanka-Flagஇந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு இந்த ஆண்டில் கையெழுத்திடப்படும் என்ற சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று நடத்திய சிறப்பு செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

“எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு தொடர்பாக இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த உடன்பாடு தொடர்பான எல்லா நடைமுறைகளும்  இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு செய்யப்படும்.

இந்த உடன்பாடு, சிறிலங்காவின் பொருளாதாரத்துக்கு ஊக்கமளிப்பதாக அமையும்.

சில தரப்பினரால் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அடிப்படையற்றவை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *