ஜப்பான் சென்றார் மகிந்த
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று அதிகாலை 12.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற அவர், நேற்றிரவு ஜப்பானின் நரிடா விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.
இவர் ஜப்பானில் தங்கியிருக்கும் போது பல்வேறு அரசியல் மற்றும் மத நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.
இவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான, விமல் வீரவன்ச, ரோகித போகொல்லாகம, ஜனக வக்கும்புர, தனசிறி அமரதுங்க, மற்றும் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அணியினர் 10 பேர், அவரது உதவியாளர்கள் மற்றும் அதிகாரிகளும் ஜப்பான் சென்றுள்ளனர்.
எதிர்வரும் 22ஆம் நாள் வரை மகிந்த ராஜபக்ச ஜப்பானில் தங்கியிருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.