மேலும்

வெடிவிபத்து சேதத்தை மதிப்பிட காலஅவகாசம் தேவை – பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர

Brigadier Jayaweeraகொஸ்கம- சலாவ இராணுவ முகாமில் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்துக்கான காரணத்தைக் கண்டறிவதற்கு, காலஅவகாசம் தேவைப்படுவதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்தார்.

நேற்றுமாலை 5.47 மணியளவில் சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தை அடுத்து ஏற்பட்ட தீ நேற்றிரவு பலமணி நேரமாகத் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது.

தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக நேற்றிரவு அறிவிக்கப்பட்ட போதிலும், அந்த இடத்தை நெருங்க முடியாதிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலையிலேயே, தீயணைப்புப் படையினரும், மீட்பு அணிகளும் முகாமுக்குள் சென்று தேடுதல்களில் ஈடுபடவுள்ளனர்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்தோ, விபத்தில் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடவோ காலஅவகாசம் தேவைப்படுவதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்தார்.

வெடிப்புச் சிதறல்கள் விழுந்து கொண்டிருந்ததால் முன்னெச்சரிக்கையாகவே கொழும்பு –அவிசாவளை வீதி மூடப்பட்டதாகவும், சுற்றுப் புறங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தீ பரவாமல் கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் வெளியேற்றப்பட்ட பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், இராணுவம், கடற்படை, விமானப்படை, காவல்துறை என்பன பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *