திருகோணமலை பெருநகர அபிவிருத்தியை திட்டமிடும் பொறுப்பு சிங்கப்பூர் நிறுவனத்திடம்
திருகோணமலையை அபிவிருத்தி செய்வது தொடர்பாக, சிங்கப்பூரின் உட்கட்டமைப்பு ஆலோசனை நிறுவனமான சேர்பனா ஜுரோங் நிறுவனத்துக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.
இதன்படி, திருகோணமலைப் பெருநகரப் பகுதி, மற்றும் அதனைச் சுற்றியுள்ள நகரங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பான நீண்டகால அபிவிருத்தித் திட்டத்தை, சிங்கப்பூர் நிறுவனம் வரையவுள்ளது.
சிறிலங்கா வந்திருந்த சிங்கப்பூரின் வர்த்தக அமைச்சர் ஈஸ்வரன் மற்றும் சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் முன்னிலையில், நேற்று முன்தினம் இந்த புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.
திருகோணமலை பெருநகர அபிவிருத்தி மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனுராதபுர, பொலன்னறுவ, ஹிங்குராக்கொட, மட்டக்களப்பு அகிய நகரங்கையும் அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை வகுக்க துறைசார் நிபுணத்தவம் வாய்ந்த வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிடம் பணியை ஒப்படைக்க சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது.
அதற்கமையவே சிங்கப்பூர் நிறுவனத்திடம் இந்த பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.