மேலும்

இந்தியப் பிரதமர் அனுதாபம்- அவசர உதவியை அனுப்ப உத்தரவு

narendra-modiசிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பெருமளவானோர் உயிரிழந்திருப்பதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். அத்துடன் அவசர உதவிகளை அனுப்பி வைக்கவும் உததரவிட்டுள்ளார்.

இதுதொடர்பான அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மோசமான  காலநிலையால், சிறிலங்காவில் உயிர்களை இழந்தவர்களுக்காக ஆழந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவசரகால அடிப்படையில் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் உதவிகளை வழங்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *