புதுடெல்லி சென்றடைந்தார் சிறிலங்கா அதிபர்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இரண்டு நாள் பயணமாக இன்று பிற்பகல் புதுடெல்லியைச் சென்றடைந்தார். லண்டனில் இருந்து புதுடெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தைச் சென்றடைந்த சிறிலங்கா அதிபரை, இந்தியாவின் திட்டமிடல் மற்றும் பாதுகாப்பு இணை அமைச்சர் ராவ் இந்திரஜித்சிங் வரவேற்றார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு நாளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இராப்போசன விருந்து வழங்குவார்.
இதன்போது முக்கிய பேச்சுக்களும் நடத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.