பிரித்தானியப் பிரதமரைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நேற்று பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
ஊழல் ஒழிப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரித்தானியா சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இந்த மாநாட்டின் ஒரு பக்க நிகழ்வாகவே, பிரித்தானியப் பிரதமரைச் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பில் சிறிலங்கா மற்றும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளும் பங்கேற்றனர்.