மேலும்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கு அவசரப்படமாட்டோம் – என்கிறார் ருவான் விஜேவர்த்தன

ruwan-wijewardeneபயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அவசரப்படாது என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், ‘பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் அவசரம் காட்டாது.

இதுபற்றி முடிவெடுப்பதற்கு முன்னதாக, நிலைமைகள் கவனமாக ஆராயப்படும்.

அத்துடன், இதனுடன் தொடர்புடைய சிறிலங்கா இராணுவம் உள்ளிட்ட ஏனைய பங்காளிகளுடனும் கலந்துரையாடப்பட்டே முடிவு எடுக்கப்படும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக, தேசிய பாதகாப்புச் சட்டத்தை கொண்டு வரவுள்ளதாகவும், வரும் ஜூன் மாதம் இந்தச் சட்டமூலம் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்த்திருப்பதாகவும் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்திருந்தார்.

இந்தநிலையிலேயே, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க அவசரப்படப் போவதில்லை என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *