மேலும்

பசில் ராஜபக்ச கைது

basilசிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறையில், நிலம் ஒன்றை முறைகேடான வகையில் கொள்வனவு செய்த குற்றச்சாட்டிலேயே பசில் ராஜபக்ச கைது செய்யப்பட்டார்.

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை முன்னிலையான போதே பசில் ராஜபக்ச கைது செய்யப்பட்டார்.

basil

படம் – டெய்லி மிரர்

அவரை மாத்தறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஏற்கனவே பசில் ராஜபக்ச திவிநெகும நிதியத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *