சிவராம் படுகொலையாகி 11 ஆண்டுகள் – கொழும்பில் ஆர்ப்பாட்டம், யாழ்ப்பாணத்தில் நினைவு நிகழ்வு
மூத்த ஊடகவியலாளர் டி.சிவராம் படுகொலை செய்யப்பட்டு நேற்றுடன் 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஊடகவியலாளர்கள் படுகொலைகளுக்கு நீதி வழங்கக் கோரி கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
கோட்டே தொடருந்து நிலையத்துக்கு முன்பாக நேற்றுக்காலை திரண்ட பல்வேறு ஊடக அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும், ஊடகவியலாளர்களும், நீதி வழங்கக் கோரும் பதாதைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேவேளை, ஊடகவியலாளர் சிவராம் நினைவு நிகழ்வு நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, படுகொலையான ஊடகவியலாளர்களின் நினைவிடத்தில் நேற்றுப் பிற்பகல், நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையடுத்து, யாழ்.பொதுநூலக மண்டபத்தில் நினைவுரைகள் இடம்பெற்றன.