சம்பந்தனுக்கு எதிராக முறைப்பாடு செய்யவில்லை – சிறிலங்கா இராணுவம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனுக்கு எதிராக, சிறிலங்கா காவல்துறையில் முறைப்பாடு எதையும் பதிவு செய்யவில்லை என்று சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமுக்கும், இரா.சம்பந்தன் அத்துமீறி நுழைந்ததாகவும், அவருக்கு எதிராக சிறிலங்கா இராணுவத்தின் கிளிநொச்சி கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகரவினால், கிளிநொச்சி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்புகள் பரப்புரை செய்து வருகின்றன.
இது தொடர்பாக சிறிலங்கா காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாகவும், சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.
இந்த நிலையிலேயே, தாம் அத்தகைய முறைப்பாடு எதையும் செய்யவில்லை என்று சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.
நல்ல வேளையாக அவரது பதவி தமிழ் இனத்துக்கு உதவுகிறதோ இல்லையோ அவருக்கு உதவுகிறது. இல்லை என்றால் ஒரு நாயைச் சுட்டது போலச் சுடு பட்டிருப்பார்.