மேலும்

இந்த ஆண்டில் சீனாவுடனான பாதுகாப்பு உறவுகள் மேலும் வலுவடையும் – என்கிறது சிறிலங்கா

sl-china-silkroad-ex (5)சீனாவுடனான பாதுகாப்பு உறவுகள் இந்த ஆண்டில் மேலும் வலுப்படுத்தப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சீன செய்தி நிறுவனமான சின்ஹூவாவிடம் இது தொடர்பாக கருத்து வெளியிட்ட சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச,

”தமிழ்ப் புலிகளுக்கு எதிரான போரை சிறிலங்கா முடிவுக்குக் கொண்டு வருவதற்கு சீனா உதவி செய்தது.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் கலந்துரையாடல்களை நடத்தி வருகிறது.

சீனாவுடன், மிகவும் வலுவான உறவை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

ஏற்கனவே சிறிலங்கா இராணுவத்தினருக்கு சீனா சில பயிற்சிநெறிகளை வழங்கி வருகிறது. இந்தத் துறையில், எமது உறவுகளை மேலும் விரிவாக்கலாம் என்று நம்புகிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *