மேலும்

லசந்த படுகொலை திட்டம் குறித்து கூட்டு நடவடிக்கை பணியகத்துக்கு முன்னரே தெரியும்

lasantha_murderசண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்படுவதற்கு ஒரு மணிநேரம் முன்னதாக, அந்தக் கொலைத் திட்டம் பற்றிய இரகசியத் தகவல் கூட்டு நடவடிக்கைப் பணியகத்துக்கு அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பாக இருந்த இராணுவ அதிகாரி ஒருவரால் இந்த இரகசியத் தகவல் பெறப்பட்டதாக,  கூட்டு நடவடிக்கைப் பணியகத்தில் முன்னர் பணியாற்றிய உயர் அதிகாரி ஒருவர், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

கூரிய ஆயுதம் ஒன்றைப் பயன்படுத்தி லசந்த விக்கிரமதுங்கவைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதான தகவலை கூட்டு நடவடிக்கைப் பயணிகத்தில் இருந்த இராணுவ அதிகாரி பெற்றிருந்தார்.

இந்த தகவல், 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி காலை 9 மணியளவில்- லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்படுவதற்கு சுமார் ஒரு மணிநேரம் முன்னதாக,  கிடைத்தது.

அந்த இராணுவ அதிகாரியின் தொலைபேசி உரையாடல் பதிவுகளை ஆய்வு செய்தால் படுகொலை பற்றிய முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்றும் அந்த முன்னாள் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *