மேலும்

துறைமுக நகரத் திட்டம் குறித்து சீனாவுடன் புதிய உடன்பாடு – மலிக் சமரவிக்கிரம

port-cityதுறைமுக நகரத் திட்டம் தொடர்பாக சீனாவுடன் அடுத்த சில வாரங்களுக்குள் புதிய உடன்பாடு கையெழுத்திடப்படும் என்று சிறிலங்காவின் அபிவிருத்தி மூலோபாய மற்றும் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவி்த்துள்ளார்.

சீனாவின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ள துறைமுக நகரத் திட்டத்தின் புதிய உடன்பாடு குறித்து சீன கட்டுமான நிறுவனத்துடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.

இதில், கடலில் இருந்து உருவாக்கப்படும் நிலப்பகுதியின் அளவைக் குறைப்பது முக்கிய விடயமாகும். இதன் மூலம் சுற்றாடல் பாதிப்பை குறைக்க முடியும்.

துறைமுக நகரத் திட்டத்தை தொடர அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஆனால் அதுபற்றிய உடன்பாட்டில் சிறிய மாற்றங்கள் செய்யப்படும். இதுகுறித்து பேச்சுக்கள் நடத்தப்படுகின்றன.

புதிதாக உருவாக்கப்படும் நிலப்பகுதி யாருக்கும் உரிமையாக வழங்கப்படாது. 99 ஆண்டு குத்தகைக்கு மட்டுமே வழங்கப்படும். இதற்கு இரண்டு தரப்புகளும் இணங்கும் என்று நான் நினைக்கிறேன்.

இந்த திட்டத்தில் மாற்றங்களை செய்வது குறித்து அடுத்த சில வாரங்களுக்குள் முடிவு செய்யப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துப் பேச்சுக்களை நடத்துவதற்காக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம நாளை சீனாவுக்குச் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *