மேலும்

ஜேர்மனி அதிபரைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்

maithri-angelaமூன்று நாள் அதிகாரபூர்வ பயயணமாக ஜேர்மனி சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர், அந்த நாட்டின் அதிபர் ஏஞ்சலா மார்க்கலை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

பெர்லினில் உள்ள ஜேர்மனி அதிபரின் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது இருதரப்பு உறவுகளை வலுப்படு்த்துதல், சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகள் மற்றும், சிறிலங்காவுக்கான பொருளாதார உதவிகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

maithri-angela

43 ஆண்டுகளுக்குப் பின்னர், சிறிலங்காவின் அரசுத் தலைவர் ஒருவர் ஜேர்மனிக்கு அதிகாரபூர்வ பயணமாகச் சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *