மேலும்

மகிந்த வெளியே போவதை தடுக்கமாட்டோம் – சிறிலங்கா சுதந்திரக் கட்சி

duminda dissanayakeசிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருப்பதா அல்லது வெளியேறுவதா என்று முடிவு செய்யும் சுதந்திரம் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ளார் அந்தக் கட்சியின் பொதுச்செயலர் துமிந்த திசநாயக்க.

,இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் துமிந்த திசநாயக்க,

“மகிந்த ராஜபக்சவின் முடிவில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலையிடாது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிதாக வந்து சேர்ந்தவர் போல மகிந்த ராஜபக்ச நடந்து கொள்கிறார்.

கட்சியின் யாப்பை மீறிச் செயற்பட எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

கட்சியை விட்டுப் போகிறவர்களைத் தடுத்த நிறுத்தமாட்டோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *