மேலும்

யார் எதிர்த்தாலும் இந்தியா, சீனாவுடன் உடன்பாடு செய்வோம்- சூளுரைக்கிறார் சிறிலங்கா பிரதமர்

ranil-யார் எத்தகைய போராட்டங்களையும் நடத்தினாலும், அடுத்த மாதம் இந்தியாவுடனும், சீனாவுடனும் உடன்பாடுகளை கைச்சாத்திட்டே தீருவோம் என்று சூளுரைத்திருக்கிறார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

கொழும்பில் நேற்று, நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,  ‘இந்தியாவுடன் உடன்பாடு செய்யப் போகிறோம் என்று எதிரணியினர் முழக்கமிடுகின்றனர்.

இவ்வாறு வீணான முறையில் பணம் கொடுத்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தி  காலத்தை வீணடிக்க வேண்டாம். வீண் போராட்டங்களுக்கு மக்களை வீதியில் இறக்க முற்பட வேண்டாம். இத்தகைய போராட்டங்களுக்கு மார்ச் மாதம் தகுந்த பதிலடி கொடுப்போம்.

அடுத்த மாதம் இந்தியாவுடனும் சீனாவுடனும் உடன்பாடுகளை கைச்சாத்திட்டே தீருவோம்.

எம்முடன் ஒன்றிணைந்து பயணிக்க முடியுமாயின் அரசின் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழையுங்கள். அதற்கு மாறாக எமது பயணத்தின் முன் குறுக்கிட வேண்டாம்.

பிரதான கட்சிகள் ஒன்றிணைந்திருப்பது நாட்டுக்கு ஏதாவது நலனை செய்வதற்கேயாகும். எமது வேலைத்திட்டங்களை பின்னநகர்த்த முனைய வேண்டாம்.

மூழ்கினால் மூழ்கியதுதான் எம்மால் எழுந்து நிற்கமுடியாது. தேசிய அரசாங்கத்தின் பயணத்தை தடுத்து நிறுத்துவதற்கு எவராலும் முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *