மேலும்

தமிழ் மக்களின் இதயங்களை வெல்ல வேண்டும் – மகாநாயக்க தேரர்களிடம் வடக்கின் புதிய ஆளுனர்

reginold-coorayபோரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் இதயங்களை வெற்றி கொள்ள வேண்டிய தேவை இருப்பதாகத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுனர் ரெஜினோல்ட் குரே.

இன்று கண்டியில் அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிய பெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“சிறிலங்கா போரில் வெற்றியைப் பெற்ற போதிலும், தமிழ் மக்களின் இதயங்கள் இன்னமும் வெல்லப்படவில்லை.

reginold- cooray - malwatta

எனது நியமனத்தை வடக்கிலுள்ள தமிழர்கள் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், வடமாகாண ஆளுனர் என்ற எனது பணி இலகுவாக இருக்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *