மேலும்

பரணகம ஆணைக்குழுவுக்கு மூன்று மாத சேவைநீடிப்பு

Maxwell Parakrama Paranagamaகாணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் செயலகம் தெரிவித்துள்ளது.

மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான இந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடையவிருந்தது.

இந்த நிலையில், நேற்று திங்கட்கிழமை தொடக்கம் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ஆணைக்குழுவின் பதவிக்காலம், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நீடிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மூன்று மாதங்களுக்கே பதவி நீடிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *