மேலும்

ஜேர்மனிக்குப் புறப்பட்டுச் சென்றார் சிறிலங்கா அதிபர்

maithri-airportசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இரண்டு ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தை மேற்கொண்டு இன்று காலை ஜேர்மனிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

முதலில் பெர்லின் செல்லும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அங்கு மூன்று நாட்கள் அரசு விருந்தினராகத் தங்கியிருப்பார். இதன்போது ஜேர்மனியின் அரசுத் தலைவர்களுடன் பல்வேறு பேச்சுக்களை நடத்துவார்.

அதையடுத்து, சிறிலங்கா அதிபர்,  இரண்டு நாள் பயணமாக, ஒஸ்ரியாவுக்குச் செல்வார்.

maithri-airport

சிறிலங்கா அதிபருடன் 25 பேர் கொண்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், ஊடகவியலாளர்களைக் கொண்ட குழுவும், பெர்லின் சென்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *