சரத் பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க ஐதேக செயற்குழுக் கூட்டத்தில் முடிவு
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஐக்கிய தேசிய முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார்.
இதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று அங்கீகாரம் அளித்துள்ளதாக, கட்சியின் உதவிப் பொதுச்செயலர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்த்தனவின் காலமானதால், ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கே, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்படவுள்ளார்.
நாளை நாடாளுமன்றம் கூடும் போது சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறப்பினராகப் பதவியேற்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சரத் பொன்சேகாவுக்கு படையினர் நலன்காக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.