பதவி விலகுகிறார் வடக்கு மாகாண ஆளுனர் – புதிய ஆளுனர் ரெஜினோல்ட் குரே?
வடக்கு மாகாண ஆளுனர் எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்கார இந்த மாத இறுதியுடன் தனது பதவியில் இருந்து ஓய்வுபெறுவதற்கு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளனர்.
வடக்கு மாகாண ஆளுனர் பதவியில் இருந்து, விலகிக் கொள்வது குறித்து அவர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்று, புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொண்ட சில நாட்களில்- கடந்த 2015 ஜனவரி 15ஆம் நாள், எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்காரவை வடக்கு மாகாண ஆளுனராக நியமித்திருந்தார்.
இவர் பதவியில் இருந்து விலகும் நிலையில், புதிய ஆளுனராக முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர், மேல் மாகாண முதலமைச்சராகவும் பணியாற்றியவர் என்பதும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.