ஜெனிவா தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதை கண்காணிக்க வரவில்லையாம் ஹுசேன்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும் நோக்கில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வரும் 6ஆம் நாள் தொடக்கம், 9ஆம் நாள் வரை – நான்கு நாட்கள் சிறிலங்காவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இந்தப் பயணம், ஜெனிவாவில் கடந்த ஒக்ரோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும் வகையிலானதாக இருக்காது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேஷினி கொலன்னே தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம், விடுக்கப்பட்ட அழைப்பின் பேரிலேயே அவர் கொழும்பு வரவுள்ளார்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.