மேலும்

புலிகளுக்கு நிதிசேகரித்த இலங்கைத் தமிழருக்கு ஜேர்மனி நீதிமன்றம் சிறைத்தண்டனை

gavelவிடுதலைப் புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக இருந்து, நிதி சேகரித்துக் கொடுத்தார் என்று குற்றம்சாட்டப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவருக்கு, ஜேர்மனி நீதிமன்றம் 18 மாத கால ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்துள்ளது.

53 வயதுடைய யோகேந்திரன் ஜி என்று அடையாளப்படுத்தப்படும், ஜேர்மனி குடியுரிமை பெற்ற இந்த தமிழருக்கு, வடபகுதி நகரான ஹம்பேர்க்கில் உள்ள நீதிமன்றமே சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

2007ஆம் ஆண்டுக்கும், 2009ஆம் ஆண்டுக்கும் .இடையில் இவர், போருக்காக விடுதலைப் புலிகளுக்கு 81 ஆயிரம் யூரோவை சேகரித்துக் கொடுத்தார் என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தார்.

தாம் புலிகளுக்காக நிதி சேகரித்து பரிமாற்றம் செய்ததை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதாக, நீதிமன்றப் பேச்சாளர் கூறியுள்ளார்.

ஜேர்மனியில் 1000 வரையான விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இருப்பதாகவும் அவர்களில் பெரும்பாலானோர், பரப்புரை மற்றும், நன்கொடை ஒழுங்கமைப்புகளில் ஈடுபடுவதாகவும் ஜேர்மனி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *